Wednesday, January 21, 2015

அக்கா சொன்ன நான்கு வரிக்கதை

0

ஆடு ஒன்றின் காலிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதற்குப் பக்கதிலிருந்து ஒருவன் அழுது கொண்டிருந்தான்.


அந்த வழியால் வந்த அவனது நண்பன், "இது உன்னுடைய ஆடு அல்லவா. என்ன நடந்தது. யார் அதன் காலை முறித்தார்?" என்று கேட்டான்

அதற்கு அந்த ஒருவன் சொன்னான்:
"விருந்தினர்கள் வருகின்றார்கள் இன்று. அவர்களுக்கு ஆட்டுக்கறி என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அன்பாக நான் வளர்த்த ஆடு இது. ஒரேயடியாய் எப்படி நான் அதைக் கொல்வேன்.. அதுதான் கொஞ்சங் கொஞ்சமாய்க் கொல்லுறன்".

0 comments:

Post a Comment